Header Ads



சஜித் ஜனாதிபதியாகி 2 மாதங்களில், நாட்டை மாற்றிக்காட்டுவேன் - பொன்சேக்கா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விருப்பமின்றியும் சிரமத்திற்கு மத்தியிலும் நாட்டை நிர்வகிக்க நேரிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி ஹூணுப்பிட்டிய பிரதேசத்தில் இன்று -28- நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

ஜனாதிபதிக்கு எதிராக நானோ முதலில் குரல் கொடுத்தேன். அன்றில் இருந்து நான் பல விதங்களில் பழிவாங்கப்பட்டேன். எதிரிகளை அடையாளம் காணும் அதிஷ்டம் என்னிடம் இருக்கின்றது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மக்கள் அடிமைகளை போல் இருந்தனர். மீண்டும் அந்த நிலைமை ஏற்பட இடமளிக்கக் கூடாது.

இதற்காக தியாகங்களை செய்து சேவையாற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராக இருக்கின்றனர்.

எமது தரப்பிலும் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் நபர்கள் இருக்கின்றனர். எமது எதிரணியினரான ராஜபக்சவினர் வெற்றி பெற்றால், ஐக்கிய தேசியக் கட்சி அழிந்து கரைந்து போக வாய்ப்புள்ளது.

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வெளிநாட்டு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட மாட்டாது. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவான பின்னர், இரண்டு மாதங்களில் நாட்டில் இருக்கும் வன்முறைகள், போதைப் பொருள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வந்து உணரும்படியான மாற்றத்தை ஏற்படுத்த போவதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. 32 வயது என்ற நினைப்பில் சொற்பொழிவை நிகழ்த்துகின்றார், இரண்டு மாதங்களில் எதனை மாற்றிக் காட்டப்போகிறார் என்பது புரியவில்லை. பொதுமக்களுக்கு கரட் காட்டுகின்றாரா அல்லது ரோஜா மலர்கொத்தை வழங்குகிறாரா என்பது பெரும் புதிராகவே இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.