Header Ads



250 கிலோ பணப்பெட்டகத்தை, திருடிய திருடன் - ஹிக்கடுவயில் விசித்திரம்

ஹிக்கடுவ பகுதியில் உள்ள விற்பனை நிலையங்கள் இரண்டில் திருடிய நபர் ஒருவரை ஹிக்கடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஹிக்கடுவ பகுதியில் உள்ள இறைச்சி விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து குறித்த திருடன் 49000 ரூபா பணத்தை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் குறித்த நபர் கடந்த 7 ஆம் திகதி பீஸா விற்பனை நிலையம் ஒன்றின் இருந்த 250 கிலோ எடையுடைய பணப் பெட்டகத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த திருடன் பணப் பெட்டகத்தை எடுத்துச் செல்லும் விதம் குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது. 

குறித்த பணப் பெட்டகத்தில் இருந்து 196,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.