Header Ads



100 வீத முஸ்லிம்கள் மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்தும், இன்று என்ன நடந்துள்ளது? கோட்டாபய

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ கண்டியில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் இன்று -23- பங்கேற்றிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவினால் தலாதுஓயா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்த கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றுகையில், அபிவிருத்தி செயற்பாடுகள் நான்கு வருடங்கள் பின்னோக்கி சென்றுள்ளதாகவும் காணிகள் வௌிநாடுகளுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இந்நிகழ்வில் உரையாற்றுகையில், வௌிநாட்டு சக்திகளுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அரசாங்கம் அடிபணிந்து இராணுவ வீரர்களின் மனோநிலையை பாதிப்புக்குள்ளாக்கியதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தாம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை தற்போதைய அரசாங்கம் நிறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச விமான நிலையம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தளவு உறுதுணையாக இருக்கும் என கேள்வி எழுப்பிய அவர், மஹிந்த ராஜபக்ஸவை வீழ்த்துவதற்காகவே மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்தியதாகக் கூறினார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு பிரசாரக் கூட்டம் இன்று கம்பளையில் நடைபெற்றது.

இந்த பிரசாரக் கூட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதாக மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்தார். மேலும், நல்லாட்சி நீண்டகாலம் நீடிக்காது எனவும் சூளுரைத்தார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

கொம்பனி வீதியில் குடிசை வீடுகளில் இருந்த அனைவருக்கும் மாடி வீடு திட்டத்தை அமைப்பதற்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வந்த போது, அது தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு இரண்டு வருடங்கள் எனக்கு நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டது. எனினும், நான் அந்தத் திட்டத்தை ஆரம்பித்தேன். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு, அந்த வீடுகளைப் பகிர்ந்தளித்து அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். 100 வீதமான முஸ்லிம் மக்களும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக அன்று வாக்களித்தனர். எனினும், இன்று என்ன நடந்துள்ளது? அனைத்து வியாபாரங்களும் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த பொய் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம்.

3 comments:

  1. உங்கள் வாய் தான் உங்களுக்கு ஆப்பு. இதை யார் செய்விக்கிறார்கள் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது.

    ReplyDelete
  2. நாய்க்கு நாய் _ என்று சொல்லுமாம்.

    ReplyDelete
  3. உங்களின் கேள்விக்கான பதில் உங்களிமே உள்ளது. முஸ்லீம்களுக்கு செய்த அனைத்து அநியாயங்களினதும் சூத்திரதாரிகள் உங்களிடம்தான் உள்ளார்கள். இன்ஸாஅல்லாஹ் இவை அனைத்துக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டிய நாள் வரும்

    ReplyDelete

Powered by Blogger.