UNP யை தோற்கடித்து, மக்களின் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத்தக்க ஒரே வேட்பாளர் கோத்தபாயதான்
எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ள உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த முடிவு தவறானது என்பதை அந்த கட்சிக்குள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அந்த கட்சியினர் எதிர்காலத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். சுதந்திரக் கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும்.
ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சிலரே உள்ளனர்.
ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்குள் கட்டுப்பாடுடன் இருக்கின்றனரா என்பது சிக்கலுக்குரியது.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கக் கூடிய, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஒரே வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை பொதுஜன பெரமுன நிறுத்தியுள்ளது.
அது மாத்திரமல்ல, எஸ்.டப்ளியூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் பஞ்ச மகா சக்திகள் தொடர்பாக எண்ணக்கருவை பொதுஜன பெரமுனவே பாதுகாத்தது எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒருபொய்யன்,பொய் தவிர எதையும் உளட்டுவதில்லை.பொய்யுக்கும் களவுக்கும், நாட்டைச் சூறையாடவும் நீங்கள் தயார்தானா? அப்படியானால் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள்.
ReplyDeleteIvanalam oru aall 1st manisana maara sollu what gorilla pola irukkan
ReplyDeleteYou are a big criminal guy in the world.?
ReplyDelete