பல்டி ஆரம்பம் - சஜித்திற்கு ஆதரவளிப்பதாக, நாவின்ன Mp அறிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று -28- காலை நிதி அமைச்சர் மங்கள சமவீரவினுடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அறிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் நெருக்கடியின் போது மஹிந்த தரப்பினருடன் இணைந்து செயற்பட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment