திருமணத்தில் கையெழுத்துபோட விசாரணையிலிருந்து, இடைநடுவில் சென்ற ரணில்
ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்நிலையில் இன்று சாட்சியமளிக்க வருகை தந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம் அங்கிருந்து பின்னர் வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வொன்றில் சாட்சியாக கையொப்பமிடுவதற்கு தாம் செல்ல வேண்டியிருப்பதாக குறி அவர் வெளியே சென்றுள்ளார்.
இருந்த போதும் தாம் பின்னேரம் 1.30 மணிக்கு மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்நிலையில் சாட்சியமளிக்க வருகை தருவதாக கூறிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment