Header Ads



பாலித்தவின் மற்றுமொரு மனிதாபிமானம்


மதுகம, பான்னிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த இருவரை பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது வாகனத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். 

களுத்துறை - மதுகம வீதியில் நேற்று (05) மாலை கெப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். 

இதன்போது அப்பகுதியூடாக பயணித்த பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும விபத்தில் காயமடைந்த இருவரையும் தனது வாகனத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். 

இருப்பினும் வைத்தியசாலையில் அழைத்துச் வழியிலேயே மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். 

40 வயதுடைய மீகஹதென்ன, கபுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் படுகாயமடைந்த பின்னால் அமர்ந்து சென்ற பெண் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.