Header Ads



ரணிலிடம் நிலைமையை எடுத்துக்கூறுங்கள் - கருவிடம் சம்பிக்க வலியுறுத்து

நேற்று முன்­தினம் இரவு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரி­யவை சந்­தித்த அமைசர் சம்­பிக்க ரண­வக்க ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்ளார். 

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில்  அக்­கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தில் தீர்­மானம் எடுப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை, 

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் இந்த விட­யத்தை கலந்­து­ரை­யாடி அதில் பெரும்­பான்மை ஆத­ரவை பெறும் நபர் யார் என்­பதை பார்க்க வேண்டும். மக்­களின் செல்­வாக்கை பெற்­ற­வரும் பிர­ப­ல­மான நப­ரா­கவும் கட்­சியில் இருப்­ப­வ­ரையே வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும். 

அவ்­வாறு கள­மி­றக்­கினால் மட்­டுமே கூட்­ட­ணி­யாக எம்மால் வெற்றி பெற முடியும். இந்த விட­யத்தில் இர­க­சி­ய­மாக பேச்­சு­வார்த்தை நடத்தி இர­க­சி­ய­மாக வேட்­பா­ளரை கள­மி­றக்கி எந்த பயனும் இல்லை. ஆகவே இது குறித்து நீங்­களும் கவனம் செலுத்த வேண்டும். தனித்து தீர்­மானம் எடுத்தால் கட்­சி­யாக இணைந்து பய­ணிக்­கவும் எவரும் முன்­வ­ரப்­போ­வ­தில்லை, கட்சி இரண்­டாக பிள­வு­படும். ஆகவே உங்­களின் நிலைப்­பாட்டை பிர­த­ம­ரிடம் எடுத்து கூறி ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் ஒரு தீர்­மானம் எடுக்க  வலி­யு­றுத்த வேண்டும் என்ற கார­ணி­களை அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க  சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

No comments

Powered by Blogger.