Header Ads



"ராஜபக்ஸாக்களுக்கு ஏசிக் கொண்டிருந்த பொன்சேகா, இப்போது சஜித்துக்கு ஏச ஆரம்பித்துள்ளார்"

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடாதிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என தான் நினைப்பதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரேரிக்குமாறு கோரி குருணாகலையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா குருணாகலைக் கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கே சுஜீவ சேனசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகா என்ன சொல்கின்றார், என்ன செய்கின்றார் என்பது குறித்து கூறமுடியாதுள்ளது. முன்னர் ராஜபக்ஸாக்களுக்கு ஏசிக் கொண்டிருந்தார். இப்போது சஜித்துக்கு ஏச ஆரம்பித்துள்ளார். அடுத்து யாருக்கு ஏசுவார் என்பது யாருக்கும் தெரியாதுள்ளது.

சரத்பொன்சேகா இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டு அரசியல் செய்யாமல் இருந்தால் சிறந்தது என தற்பொழுது தமக்கு தெரியவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.