Header Ads



ஜனாதிபதி வேட்பாளருக்கு SLMC நிபந்தனை விதிக்கும்

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்க வேண்டும் என தமது கட்சி, ஜனாதிபதி வேட்பாளருக்கு நிபந்தனை விதிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனைக்கு இணங்கும் வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, வடக்கு மற்றும் கிழக்கை ஒன்றாக இணைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார்.

நான் அதனை கடுமையாக எதிர்க்கின்றேன். வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ் அதிகாரங்களை கோருகிறது.

இது இந்த நாட்டுக்கு சரியில்லை. நாட்டுக்காக எம்மிடம் ஒரு கொள்கை இருக்கின்றது. உரிய நேரத்தில் நாங்கள் அதனை வெளியிடுவோம்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் அதனை வேறு விதமாக அணுக வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் கூடி வேட்பாளர்கள் முன்வைத்துள்ள கொள்கைகளை ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. மிகச் சரியான முடிவு.பொலிஸ் அதிகாரம் என்பது ஒரு போதும் எந்த கட்சி ஆட்ச்சிக்கு வந்தாலும் வழங்கமாட்டார்கல்.

    ReplyDelete
  2. @Rizard, இதில் என்ன ஆச்சரியம்? உங்கள் ISIS யின் நோக்கம் முழு இலங்கையையும் கைப்பற்றுவது தானே

    ReplyDelete
  3. மாகாண சபைகள் தேவையற்றது முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபைகளை முழுமையாக ஒழிப்பதை தன்னுடைய நிபந்தனையாக வைத்திருக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.