கபீர் விலக்கப்பட்டதாக வெளியான, செய்தி பச்சை பொய்
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து கபீர் காசிம் விலக்கப்பட்டதாக நேற்று சில ஊடகங்களில் வெளியான தகவல் பச்சை பொய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் ஆதரவு கூட்டத்தில் பங்கேற்றதற்காக இதுவரை கபீரிடம் விளக்கமோ, ஒழுக்காற்று விசாரணையோ எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் அவரை திடீரென்று கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து எக்காரணம் கொண்டும் விலக்க முடியாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்ம ஆதரவு ஊடகங்களே இவ்வாறான செய்தியை பரப்பியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியை முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சியாக காண்பிக்க முயலுவதாகவும் சஜித்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment