Header Ads



பள்ளிவாசலுக்குள் புகுந்து அச்சுறுத்திய, தமிழ் ஊடகவியலாளர் வழக்கு விவகாரம்


இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஸஹ்ரானின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் “தவ்ஹீத்” எனும் பெயரில் ஏக இறைவனை மாத்திரம் வணங்கும் அப்பாவி முஸ்லிம்கள் பலர் எம்மினத்தை சேர்ந்த கோடாரிக்காம்புகளின் காட்டிக்கொடுப்புகளால் கைதுகளின் பின்னர் சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டனர்.

அதில் பல அப்பாவிகள் எம்மால் சிறைமீட்கப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்!இன்னும் சிலரின் விடுதலைக்காக இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களும் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

பல தவ்ஹீத் பள்ளிகளும் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டன.வணக்க வழிபாடுகள் நடாத்தப்பட விடாமல் சமூக விரோதிகளின் தூண்டுதலால் பொலிசாரினால மூடப்பட்டிருந்தன. தற்போது அவைகளும் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.

அனுராதபுர மடாட்டுகம எனும் இடத்தில் சமூக விரோதிகளின் தூண்டுதலால் பிளாஷ்ரிக் தொப்பி போட்ட கொழுத்த சோத்து மாட்டினால் ஒரு தவ்ஹீத் பள்ளி உடைக்கப்படுவதை நாம் சமூக ஊடகங்களில் நேரடியாக பார்த்து ஆவேசப்பட்டிருக்கிறோம்.

இதன் ஒரு தொடர்கதையாக வவுனியாவிலுள்ள எமது சமூகத்திலுள்ள சில சமூக விரோதிகளினால் தூண்டப்பட்ட தமிழ் தேசிய செய்தி எனும் சமூக ஊடகத்தை சேர்ந்த Andrwe Preshno எனும் நபர் வவுனியா நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் பட்டானிசூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள “வவுனியா தவ்ஹீத் ஜமாஆத்(VTJ)தலைமையகத்திற்கு 31/05/2019 அன்று காலை 8.30 மணியளவில் அத்துமீறி புகுந்து அங்கு பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த மவ்லவியை பிள்ளைகளுக்கு முன்னால் அச்சுறுத்தியதுமில்லாமல் தலமையக கட்டடத்தையும் விடுயோ மற்றும் புகைப்படமெடுத்து தங்களது ஊடகமான தமிழ் தேசிய செய்தியில் ஒரு செய்தியாக போடுவதற்கு காரணமாக அமைந்துள்ளார்.

இவர்களின் செய்தியில் மடாட்டுகமயில் எப்படி தவ்ஹீத் பள்ளி உடைக்கப்பட்டதோ அதே போன்ற ஒரு நிகழ்வு “ சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பிளாஷ்ரிக் தொப்பி சோத்து மாடுகளால் இந்த பள்ளிக்கும் நடை பெறவேண்டும் என்ற உளக்கருத்தை தொணிக்கும் வகையில் வெளியிடப்பட்டது.

பொலிசாரின் மாயப்பேச்சில் பயங்கி சமாதானமாகும் வவுனியா நகரப்பள்ளி நிருவாக மரங்கள் போன்றதென நினைத்த தமிழ் தேசிய செய்தி ஊடகவியலாளர் மரங்கொத்தி VTJ என வாழைமரத்தைக் கொத்திக்கொண்டு மாட்டிக்கொண்டது. மேற்கூறப்பட்ட ஊடகவியலாளரின் வீர சாதனைகள் அணைத்தும் கனகச்சிதமாக VTJல் பொருத்தப்பட்டிருந்த CCTV ல் எடுக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக உடனடியாக VTJ யின் செயளாலர் சகோதரன் நளீமினால் எமது ஆலோசனையின் நிமித்தம் வவுனியா பொலிசில் முறையிடப்பட்டு குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் தனது ஊடக அடையாள அட்டையை(IC)? காண்பித்த போது நீதவான அவரை் பிணையில் விடுதலை செய்திருந்தார்.

நேற்றைய தினம் (9/9/2019) வவுனியா நீதவான் நீதிமன்றிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நானும் எனது மனைவியும் பாதிக்கப்பட்ட VTJ சார்பாக மன்றில் தோன்றினோம். அங்கு நடந்த விடயங்கள் வழமையான உரையாடல் வடிவில் இதோ!

நாம்:-பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நாம் மன்றில் தோன்றுகிறோம்.

(போலி)சார்:-விசாரணைகள் முடிவடைந்தமையால் இன்று பிராதும்(plaint ) குற்றப்பத்திரிகை(charge sheet) கோப்பிலிடுகின்றேன்.இந்த விடையம் மத்தியஸ்த சபையில் தீர்க்கக்கூடிய சிறிய விடயமாக தோன்றுவதால் இவ்வழக்கை மத்தியஸ்த சபையின் தீர்மானத்திற்காக அனுப்பும் படி வேண்டுகிறேன்(எவ்வளவு வாங்கி சாப்பிட்டுருப்பான் என்பதை அவரது கோரிக்கையும் தொந்தியும் எமக்கு பறை சாற்றி நின்றது.)

நீதியை நிலை நாட்ட வேண்டிய இவர்களே “வேலியே பயிரை மேய்ந்த பழமொழிக்கு உதாரணமாக அவர்கள்நின்றிருப்பதை கண்டு மனதிற்குள் துப்பிக்கொண்டேன்).

நான்; இந்த விடயம் மத்தியஸ்த சபையில் தீர்க்கக்கூடிய சாதாரண சிறு பிணக்கு அல்ல.ஒரு சமூகத்தின் வழிபாட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருப்பவர்களை அச்சுறுத்தியமைக்கான வழக்கு.

மனைவி:-கடந்த 2012யிலிருந்து குறிப்பிட்ட இடத்தில் இயங்கிவரும் இப்பள்ளிக்கான அனுமதியை மேல் நீதிமன்றத்தீர்ப்பு வழங்கியுள்ளது.பள்ளிக்குள் வந்து அச்சுறுத்திமையை சாதாரண ஒரு சிறுதவறாக போலிசார் போலியாக காட்டப்பார்க்கின்றனர்.

நீதவான்: (முதலியை நோக்கி) குற்றப்பத்திரிகையை வாசியுங்கள் !

முதலி:- முஸ்லிம் பள்ளிக்குள் அத்துமீறி உட்சென்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியமைக்கான தவறுக்கு குற்றவாளியா? சுற்றவாளியா?

சந்தேக நபரின் சட்டத்தரணி:- சுற்றவாளியல்ல!

எனது மனைவி:- குறிப்பிட்ட சந்தேக நபர் தமிழ் தேசிய செய்தி எனும் ஊடகத்தின் ஊடகவியலாளர் என்ற ரீதியிலேயே இவ்வுயர் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கின் சந்தேக நபர் தமிழ் தேசிய செய்தி உரிமையாளரான கார்த்தி என்பவரின் அனுமதி பெற்றே குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளார் என உத்தேசிக்கிறோம் எனவே கார்த்தியை இவ்வழக்கின் எதிராளியாக ஆக்கப்படவேண்டும்.

அத்தோடு சாதாரணமாக அத்துமீறல் அச்சுறுத்தல் என பொலிசாரால் போடப்பட்ட குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு மதவழிபாட்டிடத்தில் சட்டவிரோதமாக உட்புகுந்து அச்சுறுத்தியமை என மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நீதவான்:- இறுதி தீர்ப்பு வழங்கும் வரை குற்றப்பத்திரிகையைத்திருத்துவதற்கும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரையும் வழக்கில் உள்ளடக்குவதற்கான அனைத்து அதிகாரங்களையும் குற்றவியல் நடவடிக்கோவை உங்களுக்கு வழங்குகிறது.அதன் படி செயற்படுங்கள்.

எதிர்வரும் தினத்தில் உங்களது சமர்ப்பனங்களை முன்வையுங்கள் அதற்கான கட்டளையை அப்போது தருகிறேன்.எனக்கூறி வழக்கை எதிர்வரும் ஜனவரி 7க்கு ஒத்திவைத்தார்.

ஒரு பெண் இளஞ்செழியனாக காட்சியளித்த வவுனியா நீதவானின் ஆரோக்கியத்திற்காக பிராத்தித்தவர்களாக நீதிமன்றை விட்டு வெளியேறினோம்.

கடந்த 30 வருட கொடூர யுத்தத்தினால் எமது நாடு பல அழிவுகளை சந்தித்து தற்போது ஒரு சுமூகமான சூழல் உருவாக்கப்பட்டு முஸ்லிம்களும் தமிழர்களும் எவ்வளவு உயர் பதவியிலிருந்தாலும் மச்சான் மச்சான் என சகஜமாக பேசுகின்ற சூழலில் அந்த அன்னியொன்னியமாக பழகும் செயற்பாடுகளுக்கு எதிராக அர்ப்ப அரசியல் காரணங்களுக்காக செயற்படுபவர்களுக்கு எதிராக எம்மால் ICCPR ன் கீழ் வழக்கிடப்படும்.

ஆமா! ஆங்கிலத்தில் தமிழ் தேசிய செய்திlk.com என்பதின் சுருக்கத்தை இக்கட்டுரையில் எழுதி Facebook சமூக ஊடகத்தில் பதிவேற்ற பல தடவை முயற்சித்த போதும் அதனை Facebook ஆனது ஏற்றுக்கொள்ளாமல் “சட்டவிரோதமென” நிராகரிக்கின்ற போது” யார்அப்பா அந்த அரசியலமைப்பின் 6வது திருத்தத்திலுள்ள வாசகங்களை(உள்நாட்டில் வேறு அரசினை அல்கிகரிப்பதற்காக) சத்திய பிரமானம் செய்து பதவி ஏற்காத அரச உத்தியோகத்தர்அந்த பெயரை ஒரு ஊடகமாக அங்கிகரித்து ஊடக அமைச்சில் பதிவு செய்வதற்கு உதவி செய்தது ? எங்கோ இடிக்கிறதே!

சட்டத்தரணி சறூக்

5 comments:

  1. அந்த நாய்க்கு அதிக பட்ச தண்டனை கிடைக்குமலவுக்கு வாதாடுங்கல்.உங்கள் சமூக பணிக்கு எனது வாழ்த்துக்கள்.அல்லாஹ் உங்களுக்கு இன்னும் இன்னும் தைரியத்தை தர வேண்டும்.

    ReplyDelete
  2. Sir, May Allah bless you and madam, for your Humanitarian act.

    ReplyDelete
  3. இந்த சோத்து மாடுகள் ஒவ்வொரு ஜமாதுக்கு ஒவ்வொரு பள்ளியாக கட்டியதன் விளைவுதான் இது அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கினால் 90வீத பிரச்சினையும் முடிந்து விடும்

    ReplyDelete
  4. அந்த முறைதவறி பிறந்து முறையின்றி நுழைந்த தமிழ் பயங்கரவாத நாயை ஏன் அடிக்காமல் விட்டார்கள்? அவனின் முதுகெலும்பை அல்லவா நான்கு முஸ்லிம்கள் சேர்ந்து உடைத்திருக்க வேண்டும்

    ReplyDelete
  5. மதிப்புக்குரிய Muhammed Yaseer சொல்வது போன்று அணைத்து பள்ளிகளையும் உடைத்துவிட்டு சூப்பர் மார்க்கட் கட்டலாம் ஏன் என்றால் இப்ப நிறைய பள்ளிகள், ஹோட்டல்கள் போன்று சாப்பிட்டு தூங்கும் இடங்களாகதான் இருக்கிறது அல்லாஹ்வின் ரசூல் (ஸல்) அவர்கள் தமது தோழர்களான ஸஹாபாக்களுக்கு திண்ணையைத்தான் தூங்குவதக்கும் உறங்குவதக்கும் அனுமதி கொடுத்தார்கள்

    ReplyDelete

Powered by Blogger.