Header Ads



பெண்களின் முகத்திரை தொடர்பில், ACJU விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

ஆடைச் சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எமது நாட்டின் யாப்பின் பிரகாரம் அனைவருக்கும் அச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம்.

இந்நிலையில் நாட்டில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் அசாதாரண நிலை காணப்பட்டதுடன் அவசரகால சட்டமும் அமுல் செய்யப்பட்டது. அவசர கால சட்டத்தின் போது முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது. எனினும் கடந்த 08.23 ஆம் திகதியுடன் அவசர கால சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கும் விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் நாட்டு மக்களின் அச்சமும் மனோபாவமும் முழுமையாக மாறியதாக தெரியவில்லை.

இந்நிலையில் முஸ்லிம் சகோதரிகள் முகத்திரை அணிந்து வெளியேறும் போது பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாக இடமுண்டு. அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் இன வாத சக்திகளுக்கு இடமளிக்காமல் பார்த்துக் கொள்வது எமது பொறுப்பாகும்.

எனவே முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறது. எமது அவதானமான செயற்பாடுகள் எமது உரிமைகளை உரிய முறையில் பாதுகாக்க நிச்சயம் உதவும் என்ற எதிர்பார்ப்பு ஜம்இய்யாவுக்கு இருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் அனுபவித்து வந்த மதச் சுதந்திரமும், உரிமைகளும், கலாச்சாரமும் தொடர்ந்தும் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடாகும்.

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

3 comments:

  1. அதோடு அந்த கருப்பு அபாய அணிவதையும் முஸ்லிம் பெண்கள் தவழ்ந்து கொள்வது கொள்வது மிகவும் நல்லது. மக்தப்களிலும் கருப்பு அபாய மாணவிகள் உடுத்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சிறந்ததல்ல என்பது எனது கருத்து. ஏனென்றால் மாணவிகள் கூட்டமாக செல்லும் போது ஒரு வித்தியாசமான தோற்றத்தை அந்நிய மக்களுக்கு ஏற்படுத்துகின்றது. சிங்கள ஊர்களில் வாழும் முஸ்லிம் மக்கள் இவற்றை கவனத்தில் கொள்வது மிகவும் நல்லது.

    ReplyDelete
  2. ஜம்மிய்யாவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த சிறந்த வழி

    1-உரிமையை பாதுகாக்க-
    முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் முடிந்தளவு முகத்திரையை அமுல்படுத்த முயற்சி செய்தல்

    -2- உரிமை பறிபோகாமல் இருக்க-
    பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் புத்திசாதூர்யமாகவும்,நிதானமாகவும் நடந்து கொள்ளல்.

    ஏனெனில்,
    உரிமையை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
    பறிபோகாமல் பாதுகாக்கவும் வேண்டும்.

    ReplyDelete
  3. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பாெலீஸ் ஆமி இல்லையாே?

    ReplyDelete

Powered by Blogger.