Header Ads



கடவுளின் பெயரால் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித்தை அறிவிக்கும் வேலையை செய்து முடிப்போம்

ஒழுக்காற்று விசாரணைகளால், சஜித் பிரேமதாசவின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் இன்று நடைபெற்ற அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எனக்கும், சுஜீவ சேனசிங்கவுக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதால், சஜித் பிரேமதாசவின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியுமா?.

மக்களின் இந்த குரல் கேட்காத எவராவது இருப்பாரேயானால், கடவுளின் பெயரால், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்கும் வேலை செய்து முடிப்போம்.

அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் பணியை செய்து முடிக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என சிலர் கூறுகின்றனர்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டில் இன்னும் நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு போதுமான அதிகாரங்கள் இருக்கின்றன எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.