Header Ads



பின்கதவால் அதிகாரத்தை தக்கவைக்க ரணில் முயற்சி - இயலாமையை மறைக்க பல்​வேறு சூழ்ச்சி

ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பின்கதவால் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாக மத்திய மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். 

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

ஜனாதிபதி தேர்தல்கள் வரும்போது கடந்த 18 வருடங்களாக ஐ.தே.க முகம்கொடுத்து வந்த சிக்கலுக்கு மீண்டும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதனால், ஐ.தே.கவின் தலைமை தனது இயலாமையை மறைத்துகொள்ள பல்​வேறு சூழ்ச்சிகரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சாடியுள்ளார்

No comments

Powered by Blogger.