Header Ads



ரணில் மறுத்தால் சஜித், பொதுவேட்பாளராக குதிப்பார் - திரைமறைவு பேச்சுக்கள் ஆரம்பம்

வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசாவை வேட்பாளராக நிறுத்த பிரதமர் ரணில் அனுமதிக்காத பட்சத்தில் சஜித்தை பொதுவேட்பாளராக நிறுத்தும் அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சுக்கள் திரைமறைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரணிலின் இறுதி முடிவை அறிந்த பின்னர் இந்த முடிவை இறுதிப்படுத்த சஜித் ஆதரவு அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர் .

முன்னதாக கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்திய பேச்சின்போது சஜித் ஆதரவு எம் பிக்கள் தொடர்பில் சில கட்டுப்பாடுகளை ரணில் விதித்திருந்தார்.

ஆனால் சஜித்துக்கு வேட்புமனுவை தர தொடர்ந்தும் ரணில் இழுத்தடிப்பதால் அந்த கட்டுப்பாடுகளை மீற சஜித் ஆதரவு அமைச்சர்கள் – எம் பிக்கள் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக குருநாகலில் வரும் ஆறாம் திகதி நடத்தவிருந்த சஜித் ஆதரவு கூட்டத்தை பிற்போட்டிருந்தாலும் அதனை நடத்த மீண்டும் சஜித் ஆதரவு எம் பிக்களஆலோசித்து வருவதாக அறியமுடிந்தது. TN 

1 comment:

  1. In that case, UNP and Ranil will end up like TULF and Anandasangari.

    ReplyDelete

Powered by Blogger.