பதவி நீக்கியமை பற்றி இதுவரையில், எனக்கு அறிவிக்கப்படவில்லை - பௌசி
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தனக்கு இதுவரையில் எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பிலும் தனக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.எச்.எம் பௌசி, லக்ஷமன் யாபா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் விஜித் விஜேமுனி சொய்சா ஆகியவர்களின் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று (14) தெரிவித்திருந்தார்.
Post a Comment