Header Ads



ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை, இன்று முதல் செலுத்தலாம்


ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும், அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் வேட்பாளர் மனுத் தாக்கல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், வேட்பாளர் கட்டுப்பணம் இன்று (19) முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கையேற்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.