ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு நான், கோரிக்கை விடுக்கவில்லை - சபாநாயகர் மறுப்பு
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்குமாறு கடிதம் ஒன்றின் ஊடாக சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமானு பல்வேறு தரப்பினர் தன்னிடம் கோரிக்கை முன்வைத்திருந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய, கடந்த 17ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
குறித்த அறிக்கையானது விடயங்களை தெளிவுப்படும் வகையில் மாத்திரமே அமைந்துள்ளதுடன், அது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான கோரிக்கை அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment