Header Ads



சிங்கம் தப்பியோடவுமில்லை, இரவில் வீதிகளில் நடமாடவும் இல்லை - மக்களே அச்சப்படாதீர்கள்

சிங்கமொன்று தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை தெஹிவளை மிருகக்காட்சிசாலை நிர்வாகம் முற்றாக மறுத்துள்ளது.

கொழும்பு – தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்த சிங்கமொன்று தப்பிச்சென்று வெளியே இரவில் நடமாடிவருவதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகின.

இதன் காரணமாக தெஹிவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள மக்கள் இரவு நேரங்களில் வீதிகளுக்கு வராமல் வீடுகளிலேயே முடங்கிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று தெஹிவளை மிருகக்காட்சிசாலை நிர்வாகம் நேற்றைய தினம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.