புதிய ஜனாதிபதியாக வருபவர் எந்த, அமைச்சையும் தனக்கு கீழ் கொண்டு வர முடியாது
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவாக தற்போதைய ஜனாதிபதியின் பின்னர் தெரிவாகும் ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சையும் தனக்கு கீழ் கொண்டு வர முடியாது என ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அரசாங்கத்தின் எந்த நிறுவனங்களையும் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஜயம்பதி விக்கிரமரத்ன இதனை தெரிவித்தார்.
Post a Comment