Header Ads



சஜித்தை களமிறக்குவது உறுதி - கட்சிதான் காலத்தை கடத்துகிறது : அஜித்.பி.பெரேரா

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தளில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் வேட்பாளர் நியமனம் குறித்து தீர்மானம் எடுப்பதில் கட்சியே கால தாமதத்தை செய்கிறது.


எது எவ்வாறாயினும் வேட்பாளர் விவகாரத்துக்கு மிக விரைவில் முடிவு கிட்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

அமைச்சர் சஜித்துக்கான மக்கள் ஆதரவை திரட்டும் பணிகளின் தொடச்சியான பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை  குருணாகலையில் நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பில் நிலைப்பாட்டை வினவியப் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(நா.தினுஷா) 

No comments

Powered by Blogger.