சஜித்தை ஆதரிக்க, ஜனாதிபதி மைத்திரி தீர்மானம்...? (Exclusive...)
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள சஜித் பிரேதமதாசாவை ஆதரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக Jaffn Muslim இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.
இதனை சுதந்திரக் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள, முஸ்லிம் முக்கியஸ்தர் ஒருவரும் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
சஜித்துடன் மைத்திரிக்கு நீடிக்கும் தனிப்பட்ட நட்பும், கோத்தபாயா அல்லது அவரது சகோதரர்களிடம் ஆட்சி அதிகாரம் செல்வது தமக்கு பாதகமானது என மைத்திரி கருதுவதும், பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தை விட்டுக்கொடுக்க மறுப்பதும், இதற்கு பிரதான காரணமென மேலும் அறிய வருகிறது.
அத்துடன் சஜித் யானைச் சின்னத்தை தவிர்த்து, அன்னச்சின்னத்தில் களமிறங்குவதும் மைத்திரி தமது ஆதரவை சஜித்திற்கு வழங்குவதற்கு ஏதுவாக அமைந்ததாகவும், அந்த சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சஜித் யானைச் சின்னத்தை தவிர்த்து, அன்னச்சின்னத்தில் களமிறங்குவதும் மைத்திரி தமது ஆதரவை சஜித்திற்கு வழங்குவதற்கு ஏதுவாக அமைந்ததாகவும், அந்த சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் திங்கட்கிழமை சஜித் பிரேமதாசாவுக்கான தமது ஆதரவை, மைத்திரி வெளிப்படுத்துவாரெனவும் நம்பப்படுகிறது.
Post a Comment