Header Ads



சஜித்தை வெற்றிபெறச் செய்வதே எமது இலக்கு, அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ரணில் அறிவுரை

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே எமது இலக்கு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும்.

கட்சியின் வேட்பாளரின் வெற்றிக்காக முழு முயற்சியை மேற்கொள்வதும், அர்ப்பணிப்புடன் செயற்படுவதுமே எங்கள் கட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

எதிரணி வேட்பாளர் தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் எங்கள் கட்சியின் வேட்பாளரை எப்படி வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதனை நோக்கியே செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.