சஜித்திற்கு ஆதரவு வழங்க, ஆறுமுகம் தொண்டமான் தீர்மானம்
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள், சஜித்திற்கு ஆதரவு வழங்குமாறும் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கைக்கமைய சஜித்திற்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்த வாரம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மலையத்தை பாதிக்கும் 32 விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதாக தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment