Header Ads



சஜித் பிரேமதாசவே, முன்னிலையில் உள்ளார் - கபீர்

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சிலர் கோரியுள்ள போதிலும் அதில் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவே முன்னிலையில் உள்ளதாக அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாளைய தினம் இறுதித் தீர்மானம் எட்டப்படக்கூடும் என அமைச்சர் இதன் போது தெரிவித்தார். 

இதன்போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதா என அமைச்சரிடம் வினவப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அமைச்சர், அது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.