Header Ads



பழைய விலைக்கே, பாணை பெற்றுக்கொள்ளலாம் - பேக்கரி உரிமையாளர்கள் அறிவிப்பு

இரண்டு ரூபாவினால் விலை அதிகரிக்கப்படவிருந்த 450 நிறை கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்ய அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (12) நள்ளிரவு முதல் இது அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5.50 ரூபாவினால் அதிகரிக்க பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. இதனை தொடர்ந்து கடந்த 06 ஆம் திகதி முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், கோதுமை மாவின் விலையை பழைய விலைக்கு விற்பனை செய்ய குறித்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதால், பாணின் விலையை பழைய விலைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.