Header Ads



ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தமைக்காக, ஆணைக்குழுவுக்கு நன்றி

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தாங்கள் நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது, கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6.30 அளவில் ஆரம்பமான இந்தப் பேச்சுவார்த்தை இரவு 9.30வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பெஸில் ராஜபக்ஷ, வெகுவிரைவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஆணைக்குழுவில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவித்தப்பதாக கூறினார்.

No comments

Powered by Blogger.