அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான, ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து
பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான 21 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணத்தை எதிர்வரும் தினத்தில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க உள்ளது.
அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பிலான கோரிக்கையுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் இன்று ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து ஜனாதிபதியுடன் பார்வைக்குட்படுத்தப்பட்டதுடன் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி குறித்த ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த ஆவணத்தை விரைவில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
Post a Comment