Header Ads



சஜித் போட்டியிட்டால் சுதந்திரக் கட்சியின், ஒரு தரப்பினர் ஆதரவு வழங்குவர் - டிலான் பெரேரா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிட்டால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இன்றையதினம் -19- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைக்காது.

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரானால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலேயே சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் உள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற போட்டித்தன்மை கட்சிக்குள் பாரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

மறுபுறம் சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று அதுவும் தொடர் இழுபறி நிலையில் காணப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைக்காது.காலத்தை கடத்துவதற்காகவே சின்னம் உள்ளிட்ட தேவையற்ற விடயங்களுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டால் நிச்சயம் சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.