Header Ads



கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி, தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம்

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜிதா சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஆதரவு தெரிவித்து, கொலன்னாவ பகுதியில் நேற்று (29) நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் ராஜிதா சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ராஜிதா சேனாரத்ன, இலங்கைக்கான உரிய பாஸ்போர்ட் கோட்டாபயவிடம் இல்லை என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததாகவும், 2 தேசிய அடையாள அட்டைகள் இருப்பதாகவும் கூறினார். 

எனவே இவற்றை மறைக்கு, மறைமுகமாக செயற்பட்டுள்ளார்கள் அதனால் திங்கட்கிழமை எமது வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்வார்கள் எனவும் அமைச்சர் ராஜிதா சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.