Header Ads



சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய, அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் - ரணில் கோரிக்கை


தற்போதையை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திகளை பாதுகாத்து முன்னோக்கி கொண்டுச்செல்ல  ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக, ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற செய்வதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு இன்று (30) அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே, பிரதமர் இந்த விடயங்களை கூறினார்.

No comments

Powered by Blogger.