Header Ads



நள்ளிரவுவரை நீடித்து, தீர்க்கமான முடிவுகளுடன் நிறைவடைந்த சஜித் - பங்காளிகள் சந்திப்பு

ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்றிரவு 8 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு நள்ளிரவு வரை நீடித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய சார்பில் சம்பிக ரணவக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், மனோ கணேசன், பழனி திகாம்பரம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ரிஷாத் பதியுதீன், ஆகியோரை, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் காசிம், எரான் விக்ரமரத்ன ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக தகவல் வெளியிட்ட, மனோ கணேசன்,“சஜித் பிரேமதாச தரப்பினருடனான கலந்துரையாடல் தீர்க்கமான முடிவுகளுடன் முடிவடைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

“ஐதேமு சார்பான அதிபர் வேட்பாளர் விவகாரத்தை அடுத்த வாரத்துக்கு மேல் இழுபறிப்பட ஒருபோதும் இடமளிப்பதில்லை என்பது உட்பட பல முக்கியமான முடிவுகள் இந்தச் சந்திப்பில் எட்டப்பட்டுள்ளன.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சஜித் பிரேமதாச தரப்பினர் நடத்தும் சந்திப்பு முடியும் வரை, நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய முக்கிய முடிவுகள் தொடர்பாக,பங்காளி கட்சிகள் சார்பில் பகிரங்கமாக எதையும் பேசுவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மிகச் சிறந்த முடிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Congratulations go ahead

    ReplyDelete

Powered by Blogger.