Header Ads



மேற்கத்திய சார்பு அரசியல்வாதிகளின் தொடர்பில், மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்துச் செய்தால் நாடு கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார். 

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில், சில இடங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் நாடு பிளவு படாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கத்திய சார்பு அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.