சஜித்தின் தேர்தல் பிரச்சார, பொறுப்பாளராக இம்தியாஸ்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது தாமதமாகினாலும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள அவரது அணியினர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான பொறுப்பை முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவிகள் எதனையும் வகிக்காத முழுமையாக இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படும் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கை குழுவின் ஊழியர்களின் தலைமை அதிகாரிகளாக சட்டத்தரணி ரவி ஜயவர்தன மற்றும் சிதேந்திர சேனாரத்ன ஆகியோரை நியமிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது, கட்சியின் கட்டமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சர்கள் கபீர் ஹாசிம் மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு வழங்க வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment