Header Ads



சுதந்திரக் கட்சிக்கு சஜித், தூது அனுப்பினார் - ரணிலும் பச்சைக்கொடி காட்டினார்


வரும் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சு நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச,அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிப்பதற்காக பேச்சுக்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுத்துள்ள நிலையில், அந்தக் கட்சியுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு சஜித் பிரேமதாச அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஐதேகவின் பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் மூலமாக, சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகரவுக்கு இது குறித்து அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியைப் பெற்றுக் கொண்டே சஜித் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகரவுடன் ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்த சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுக்கள் வெற்றியளித்தால், கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.


No comments

Powered by Blogger.