Header Ads



'நீங்கள் எல்லாம், கடுமையான சந்தர்ப்பவாதி' - ஹக்கீமை திட்டிய ராஜித

அமைச்சர் ரவூப் ஹக்கீமை அமைச்சர் ராஜித சேனாரட்ன கடுமையாக விமர்சனம் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து நடைபெற்ற முன்கூட்டிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது ராஜித இவ்வாறு விமர்சனம் செய்துள்ளதாக தெரியவருகிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ரத்து செய்யப்படக் கூடாது என்ற தொனியில் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது “உங்களுக்கு ஆரம்பம் மறந்துவிட்டது” என ராஜித குற்றம் சுமத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்த காரணத்தினாலேயே இந்த பதவிகளை வகிப்பதாகவும் இந்த வாக்குறுதி தொடர்பிலான தார்மீக பொறுப்பு உங்களுக்கும் உண்டு எனவும் ராஜித தெரிவித்துள்ளார்.

“இன்று அது எதனையும் கருத்திற் கொள்ளாது நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதற்கு எதிராக குரல் கொடுப்பதாகவும், நீங்கள் எல்லாம் கடுமையான சந்தர்ப்பவாதி” எனவும் ராஜித, ஹக்கீமை திட்டியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரும் ஹக்கீம், பிரதமருக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியிலும் இந்த விவகாரம் தெடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டதனால், தவறுதலாக நிறைவேற்று அதிகாரத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து விட்டதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதமரிடம் மன்னிப்பு கோரவும் தயார் என ஹக்கீம் கூறியதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.

2

විධායක ජනාධිපති ක්‍රමය අහෝසි කිරීමේ යෝජනාව සම්බන්ධයෙන් පෙරේදා (19) පැවති පූර්ව කැබිනට් රැස්වීමේදී අමාත්‍ය රාජිත සේනාරත්න මහතා විසින් රවුෆ් හකීම් අමාත්‍යවරයාට ඉතාම දැඩි දෝෂාරෝපණයක් එල්ල කර ඇතැයි වාර්තා වේ. 
එක්සත් ජාතික පෙරමුණේ අමාත්‍යවරුන් අතර පැවති මෙම රැස්වීමේදී විධායක ජනාධිපති ක්‍රමය අහෝසි කිරීමට එරෙහිව රවුෆ් හකීම් මහතා වේගවත් අදහස් දැක්වීමක් සිදුකර තිබිණි. 
ඊට ප්‍රතිචාර දක්වමින් රාජිත සේනාරත්න මහතා "තමුසෙලාට මුල මතක නෑ. තමුසෙලා අද ඔය තනතුරුවල ඉන්නේ 2015දී විධායක ජනාධිපතිකම අහෝසි කරනවා කියලා පොරොන්දුවෙලා ආණ්ඩුවක් හදාගත්තු නිසා. 2015 ජනාධිපතිවරණෙදි ඒක තමයි ප්‍රධාන පොරොන්දුව වුණේ. තමුසෙටත් ඒකට සදාචාරාත්මක වගකීමක් තියෙනවා. අද මොකුත් දන්නෙ නෑ වගේ මෙතන ඒකට විරුද්ධ වෙන්නේ. තමුසෙ මහ අවස්ථාවාදියෙක්" යනුවෙන් දැඩි විවේචනයක් එල්ල කර ඇත. 
කෙසේවෙතත් කැබිනට් රැස්වීමෙන් අනතුරුව ද හකීම් අමාත්‍යවරයා අග්‍රාමාත්‍ය රනිල් වික්‍රමසිංහ මහතාට එරෙහි ප්‍රකාශයක් මාධ්‍ය වෙත ලබාදී තිබුණු අතර පසුව එය පක්ෂය තුළ දැඩි ආන්දෝලනයකට ලක්වීම නිසා එය තමන් අතින් සිදුවූ වරදක් බව ඔහු පිළිගෙන තිබේ. 
අග්‍රාමාත්‍යවරයා හමුවී මේ සම්බන්ධයෙන් සමාව ගැනීමට ද තමන් සූදානම් බව ඔහු එජාපෙ ඉදිරිපෙළ අමාත්‍යවරුන් පිරිසක් සමඟ ප්‍රකාශ කර ඇති බව ද වාර්තා විය. 

2 comments:

  1. ராஜித ஒரு tupe light போல
    இந்த சாதாரண விஷயம் தெரிந்துகொள்ளவே இவ்வளவு காலம்

    ReplyDelete

Powered by Blogger.