Header Ads



மொட்டு சின்னத்தை நாம் விரும்பவில்லை, பேச்சு தோல்வியடைந்தால் மத்திய குழு முடிவெடுக்கும்

ஜனாதிபதி தேர்தலில் “மொட்டு” சின்னத்தின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி போட்டியிடுவதனை எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சி ஆதரவாளர்களும் விரும்பவில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடனான பேச்சுவார்த்தை தோல்வியடையுமானால், மீண்டும் எமது மத்திய குழு கூட்டம் கூட்டப்பட்டு முடிவொன்று எடுக்கப்படுமென்றும் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.