Header Ads



உறுதி வழங்கிய சஜித், புதன்கிழமை அறிவிப்பேன் என ரணில் வாக்குறுதி - சுமந்திரன் டபள் கேமா..?

ஐக்­கிய தேசியக் கட்­சியின்  ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து புதன் கிழமை கட்­சியின் செயற்­கு­ழுவைக் கூட்டி இறுதி முடி­வினை அறி­விப்பேன் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்சி தலை­வர்­க­ளது

கூட்டம் நேற்று -20- மாலை அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. இந்தக் கூட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் அமைச்­சர்­க­ளான  சஜித் பிரே­ம­தாச  மலிக்­ச­ம­ர­விக்­கி­ரம அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கபீர்­ஹாசிம்  நவீன் திஸா­நா­யக்க ராஜித சேனா­ரத்ன ஆகியோர் கலந்­து­கொண்­டனர். பங்­கா­ளிக்­கட்­சி­களின் சார்பில் அமைச்­சர்­க­ளான சம்­பிக்­க­ர­ண­வக்க  மனோ கணேசன் பழ­னி­தி­காம்­பரம் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். 

இந்தக் கூட்­டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அகில இலங்கை முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதின் ஆகியோர் பங்­கேற்­க­வில்லை. இந்தக் கூட்­டத்­தின்­போது  தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  தொடர்பில் விரைவில் தீர்­மானம் நிறை­வேற்ற வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தினர்.

இங்கு கருத்துத் தெரி­வித்த அமைச்சர் சஜித் பிரே­ம­தாச மஹிந்த ராஜ­பக்ஷ  அணி­யி­னரை வெற்­றி­கொள்ள வேண்டும் என்­ப­த­னா­லேயே ஜனா­தி­பதித் தேர்­தலில்  நான் போட்­டி­யிட விரும்­பு­கின்றேன். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்தும் பிர­த­ம­ரா­கவும் கட்­சியின் தலை­வ­ரா­கவும் பதவி வகிக்க வேண்டும். ஜனா­தி­பதித் தேர்­தலில் நாம் வெற்­றி­பெற்ற பின்­னரும் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே தொட­ர­வேண்டும். அதுவே எனது நிலைப்­பா­டாகும்.  இத­னால்தான் நானும் பெரும்­பான்­மை­யான  எம்.பி.க்களும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்று விரும்­பு­கின்றோம் என்று கூறி­யுள்ளார்.

பிர­த­ம­ராக தொடர்ந்தும் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பதவி வகிக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது நிலைப்­பா­டா­க­வுள்­ளது என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இதே கருத்தை அமைச்சர் ஹபீர்­ஹா­சிமும் எடுத்துக் கூறி­யுள்ளார்.

இங்கு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிப்பு விவ­காரம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்துத் தெரி­வித்­துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் என்­னுடன் தொடர்­பு­கொண்டு நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை ஒழிப்புத் தொடர்பில் நகல் ஒன்­றினை தயா­ரித்­துள்­ள­தா­கவும் அது குறித்து அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம் மனோ கணேசன் ஆகி­யோ­ரிடம் கலந்­து­ரை­யாடி ஒப்­பு­தலை பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் கூறினார். இத­னை­ய­டுத்தே இந்த விடயம் தொடர்பில் ஆரா­யலாம் என முடிவு எடுக்­கப்­பட்­டது என்று பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதன்­போது கருத்துத் தெரி­வித்த அமைச்சர் மனோ கணேசன் சுமந்­திரன் என்­னுடன் தொடர்­பு­கொள்ள வில்லை . மாறாக நானே அவ­ருடன் தொடர்­பு­கொண்­டி­ருந்தேன். அப்­போ­துதான் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிப்புத் தொடர்பில் அவர் எனக்குத் தெரி­வித்தார்.

இத­னை­வி­ட­வேறு ஒன்றும் அவர் என்­னுடன் பேச­வில்லை. அந்த விட­யத்­திற்கு நான் ஒப்­புதல் கொடுத்­த­தாக அவர் தெரி­வித்­துள்­ளமை தவ­றா­ன­தாகும். சிறு­பான்­மை­யி­ன­ருக்கு சாத­க­மான மக்­களால் தெரிவு செய்­யப்­படும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை முற்­று­மு­ழு­தாக ஒழிப்­ப­தற்கு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிறு­பான்மைக் கட்­சிகள் உடன்­ப­ட­வில்லை. அதுவே எமது நிலைப்­பா­டா­க­வுள்­ளது என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்­த­வேளை குறுக்­கிட்ட அமைச்சர் திகாம்­பரம்  வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில்  என்னைச் சந்­தித்த சுமந்­திரன் எம்.பி. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிப்பு தொடர்பில் அமைச்­ச­ர­வையில் யோசனை சமர்ப்­பிக்­க­ப­ட­வுள்­ளமை தொடர்பில் குறிப்­பி­டத்­துடன் தமக்கு ஆத­ரவு வழங்­கு­மாறும் கோரி­யி­ருந்தார்.

ஆனால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்கும் விட­யத்தில் எமது கூட்­ட­ணியின் நிலைப்­பாடு எதி­ரா­னது என்­பதை நான் அவ­ரிடம் தெரி­வித்­த­துடன் அதற்கு ஆத­ரவு வழங்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருந்தேன் என்று எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து கருத்துத் தெரி­வித்த அமைச்சர் மலிக்­ச­ம­ர­விக்­கி­ரம சுமந்­திரன் எம்.பி.யை இன்று பாரா­ளு­மன்­றத்தில் சந்­தித்­த­போது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிப்பு விவ­காரம் தொடர்பில் வின­வி­ய­போது அந்த விட­யத்தில் தனக்கு சம்­பந்தம் இல்லை என்று அவர் மறுத்­த­தா­கவும் தெரி­வித்தார்.

ஹக்­கீம்­மீது ரணில் விசனம்

இதன்­போது பிரமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்துத் தெரி­விக்­கையில் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை ஒழிப்பு விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­தை­ய­டுத்து  அமைச்சர் ஹக்கீம் விடயம் அறியாது என்மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை ஊடங்களில் சுமத்தியுள்ளார். இது தவறான நடைமுறையாகும். நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பில் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தெரிவித்திருந்தார். அதனை அறியாது அமைச்சர் ஹக்கீம் மிகக்கடுமையாக முறைதவறி செயற்பட்டிருக்கின்றார் என்று விசனம் தெரிவித்துள்ளார்.

இந்த வாதப்பிரதிவாதங்களையடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்  புதன்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவைக்கூட்டி இறுதியான முடிவினை அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதி வழங்கி்யதையடுத்து கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.