ஜனாதிபதி வேட்பாளராக கருவை நியமிக்க, பௌத்த தேரர்கள் ரணிலிடம் வலியுறுத்து
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட தேரர்கள் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளது. அலரி மாளிகையில் பிரதமருடன், இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் யோசனையை முன்வைத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரசாரத்தை வழிநடத்த வேண்டும் எனவும் தேரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
This monks indirectly supporting
ReplyDeleteGotha.