நீர்கொழும்பு நீதிமன்றத்தினால் 7 பாகிஸ்தானியர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிப்பு
இலங்கைக்கு ஹெரோயின் இறக்குமதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 7 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி குறித்த நபர்களுக்கு எதிராக நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஹெரோயினை இறக்குமதி செய்தமை, அவற்றைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை முதலான 3 குற்றச்சாட்டுக்களின்கீழ் குறித்த பாகிஸ்தானியர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுள் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள், இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுவந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீர்கொழும்பு மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய 7பேரும் குறித்த 3 குற்றச்சாட்டுக்களின்கீழ், குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி குறித்த நபர்களுக்கு எதிராக நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஹெரோயினை இறக்குமதி செய்தமை, அவற்றைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை முதலான 3 குற்றச்சாட்டுக்களின்கீழ் குறித்த பாகிஸ்தானியர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுள் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள், இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுவந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீர்கொழும்பு மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய 7பேரும் குறித்த 3 குற்றச்சாட்டுக்களின்கீழ், குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment