Header Ads



கொரக்காபுளி சின்னத்திலாவது போட்டி, சஜித்தை நிறுத்தாவிடின் 5 முக்கிய புள்ளிகள் வெளியேறுவர்

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்படவில்லை என்றால், சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, ஹர்ச டி சில்வா, எரான் விக்ரமரத்ன மட்டுமல்லாது தான் உட்பட முக்கிய அமைச்சர்கள் அரசியலில் இருந்து விலகி விடுவார்கள் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவை பெந்திவெவ நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றி பெறக் கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச. அவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படாவிட்டால், பொதுஜன பெரமுனவுக்கே சாதகமாக அமையும். சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படாவிட்டால், யானை சின்னத்தில் அல்ல குடம்புளி (கொரக்காபுளி) சின்னத்திலாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட செய்து, சஜித் பிரேதாசவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வருவோம் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.