இலங்கையின் மனிதாபிமானம் - வங்காளத்திற்கு 50.000 டொலர்ககளை நிவாரண நிதியாக வழங்குகிறது
பங்களாதேஷில் திடீரென ஏற்பட்ட வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு வௌ்ள நிவாரண நிதியாக 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த வருடத்தில் ஜுலை மாதம் தொடக்கம் பங்களாதேஷில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு பங்களாதேஷ் மக்கள் அரசாங்கத்திற்கு அவசர வெள்ள நிவாரண நிதியாக 50ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Nice hear good works
ReplyDelete