Header Ads



கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் 4 வகையாளவர்கள், அட்சத்துடன் இருக்க வேண்டும்


கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால், நாட்டை அழிக்க முயற்சிக்கும் நபர்களே அச்சத்தில் இருக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

24 மணி நேரமும் தூங்காமல் விழித்திருப்பவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கக் கூடாது. தீர்மானங்களை எடுக்கக் கூடியவரே ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.

அதேவேளை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தும் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை காட்ட எவருமில்லை.

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் அச்சத்துடன் இருக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். பயங்கரவாதிகள், பாதாள உலகத்தினர், காடுகளை வெட்டுவோர், கடத்தல்காரர்களே அச்சத்துடன் இருக்க வேண்டும்.

இவர்களை தவிர வேறு எவரும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் இருக்கும் அரசாங்கத்தின் மீது அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.