Header Ads



ஐதேக ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்ய, 4 பேர் கொண்ட குழு நியமனம்


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

தலைவர் மற்றும் பிரதித் தலைவருக்கிடையிலான சந்திப்பின் போது குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தலைவரின் பக்கத்தில் இருந்து தினேஷ் வீரக்கொடியும் ராஜித்த சேனாரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதித் தலைவரின் பக்கத்தில் இருந்து மத்தும பண்டாரவும் கபீர் ஹாஷிமும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நவீன் திசாநாயக்க கூறினார்.

பல கணிப்பீடுகளை ஆராய்ந்து, சிங்கள பௌத்த வாக்கு வங்கி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் போன்ற விடயங்களை ஆராய்ந்து, அதிக வாக்குகளைப் பெற முடியுமான வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என நவீன் திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.