Header Ads



சாய்ந்தமருதிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை - குடும்பத்தினர் கவலை

அம்பாறை மாவட்டத்தின்   சாய்ந்தமருது  மாளிகைக்ககாட்டுத் துறையில் இருந்து ஆழ்கடல் இயந்திரப் படகு ஒன்றில்   மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள்  இதுவரை கரைதிரும்பவில்லை  என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கடந்த  புதன்கிழமை(18)   மாளிகைக்ககாட்டுத் துறையில் இருந்து  குறித்த படகில் சென்ற நிலையில் 3 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக  அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். 

சாய்ந்தமருதை சேர்ந்த  சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 )  காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளதாக தெரிவித்த குடும்பத்தினர் அவர்களின் வருகைக்காக பெரும் அவாவுடன் காத்திருக்கின்றனர். 

இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ் கடற்படை ஆகியோருக்கும் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.

அத்துடன்   மாளிகைக்காடு  கரையோர மீனவர்  பாதுகாப்பு சங்கத்தினர் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பாதுகாப்பு மையத்திற்கு காணாமல் மீனவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கி படகுகள் தேடி வருவதாக கல்முனை கரையோர மீனவர் பாதுகாப்பு சங்கத்தினர் செயலாளர் எமக்கு தெரிவித்தார்.

மேலும்   கடந்த செப்டம்பர் 4 ம் திகதி காணாமல் போன மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கையிலிருந்து 350 மைல்   தொலைவில் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் மீன்பிடிக்க சென்ற படகினை கரைக்கு கொண்டு வரமுடியாது என சர்வதேச கடல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்மையினாலே இவ்வாறான உயிரிழப்புகளும் இஉடமையிழப்புகளும் நிகழ்கின்றன.உயிரை பணயம் வைத்து கடலுக்கு செல்லும் இந்த மீனவர்களின் உழைப்பை நம்பி பல குடும்பங்கள்  காத்துக்கொண்டிருக்கின்றன. மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பாறுக் ஷிஹான்

No comments

Powered by Blogger.