Header Ads



பாக்கிர் மாக்கரின் 22ஆவது நினைவு, தினத்தை முன்னிட்டு நாளை நேரடி வானொலி நிகழ்ச்சி

முன்னாள் சபாநாயகர் தேசமான்ய எம்.ஏ.பாக்கிர் மாக்கரின் 22ஆவது நினைவு தினத்தை  முன்னிட்டு நாளை(10) நேரடி வானொலி நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர். 

செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி எம்.ஏ.பாக்கிர் மாக்கர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுவதோடு, இம்முறை பலமான மற்றும் அமைதியான இலங்கைக்கான அடித்தளம் என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படும் எம்.ஏ.பாக்கிர் மாக்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வானொலி முஸ்லிம் சேவையில் மாலை 7.30- 7.45 வரை அமைச்சர் றவுப் ஹக்கீமும் 8.05- 8.15 வரை அமைச்சர் றிஷாத் பதியுதீனும் உரையாற்றவுள்ளனர்.

ஆங்கில தேசிய சேவையில் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மாலை 6.30- 6.45 வரை உரையாற்றவுள்ளார்.

மேலும், சிங்கள தேசிய சேவையில் அமைச்சர் புத்திக பதிரன மாலை 7.45- 8.00 வரையும் உரையாற்றவுள்ளார்.

No comments

Powered by Blogger.