Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறக்க ரணில், 100 வீதம் இணக்கம் தெரிவித்துள்ளார் - நளீன் பண்டார

பொன்சேகாவின் கருத்துக்களை கவனத்திற் கொள்ள வேண்டியதில்லை.   ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் சரியான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். 

இன்று -06- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்க ரணில் விக்ரமசிங்க நூற்றுக் நூறு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தட்டில் வைத்து தரும் வேட்பாளர் பதவியை பெறுவதை விட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தில் மக்கள் கிளர்ச்சியினால் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவது பாரிய வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியிக்கு புதியவர் எனவும் அவருக்கு அரசியல் அனுபவங்கள் பெரிதாக இல்லை எனவும் அவர் தற்போது அவற்றை வெளிப்படுத்தி வருவதாகவும் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். 

எனவே பொன்சேகா இப்போது தெரிவிக்கும் கருத்துக்களை கவனத்திற் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.