Header Ads



சஜித்திற்கு வாய்ப்பு வழங்காவிட்டால் UNP க்குள் பூகம்பம் வெடிக்கும், வழங்கினால் புயல் ஏற்படும்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினை காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகும் அனைவரையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி இணைத்துக்கொள்ளக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்கள் மட்டுமே கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் இணைய ஐக்கிய தேசியக் கட்சியினர் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை தொடர்பான விடயம் எனக்கு தெரியாது. வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளக் கூடாது. தேர்வு செய்து இணைத்துக்கொள்ள வேண்டும். எல்லோரையும் இணைத்தால், மக்கள் சக்தி தைரியம் இழந்து போகும்.

சஜித் பிரேமதாசவுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும். வழங்கினால், புயல் ஏற்படும். இந்த இரண்டுக்கும் இடையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை தெரிவு செய்ய நேரிடும்.

No comments

Powered by Blogger.