Header Ads



தனக்கு தெரிந்த சகல விளையாட்டுக்களையும் சஜித் காட்டுகிறார், UNP வரலாற்றில் மிகமோசமான நெருக்கடி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பான நெருக்கடியில் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அணிகளாக பிளவுப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் மிகவும் மோசமான நெருக்கடியை தற்போது எதிர்நோக்கியுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச தனக்கு தெரிந்த அனைத்து விளையாட்டுக்களையும் காட்டி வருகிறார்.

எனினும் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்தும் நிலைப்பாட்டில் ரணில் விக்ரமசிங்க இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சி அணிகளாக பிளவுப்பட்டுள்ளது. யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் ஒரு அணி அந்த கட்சியில் இருந்து வெளியேறும்.

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பகுதியை இழந்த கட்சியாக தேர்தலில் போட்டியிடுமே தவிர அனைவரும் ஐக்கியமான கட்சியாக போட்டியிடாது என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. நீங்களும் jvp யில் இருந்த போது இப்படியான விளையாட்டை காட்டி விட்டு,அமைச்சு பதவிக்காகவும்,ஆடம்பர வாழ்க்கைக்காகவும் வெளியேறி போனது மறந்து விட்டது போலும்.

    ReplyDelete
  2. Every one talk of opposite parties weakness and mistakes BUT No politician talks of the development projects for our country.

    Politics has become a stage for criticizing each other and it completely forgot the development projects for the nation. Unfortunately our country is facing problems from top to bottom. Finally citizens are affected.

    ReplyDelete

Powered by Blogger.